Saturday, January 28, 2012

நம்ம ஊரு கடற்கரையில நடக்கிற கொடுமையை கொஞ்சம் கவனிக்கிறேலோ....?

நம்ம ஊர் கடற்கரையில் இடம்பெறும் சம்பவம் பற்றி எமக்கு ஒருவர் அனுப்பி இருந்தார் அதை அப்படியே உங்களுக்கு தருகிறோம் ..

இஞ்ச கொஞ்சம் கவனிக்கிறேலோ.....!!!

எல்லாருக்கும் வணக்கம்... எப்பிடி...நல்ல சுகமா இருக்கிறேலோ ?

வணக்கஞ் சொன்ன கையோட ஒரு பழமொழியையும் சொல்லிக்கொள்ள விரும்புறன்..
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...'
இந்தப் பழமொழிக்கும் கட்டுரைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நீங்க நினைக்கலாம்.. இருக்கு இருக்கு...

ஊரில, வாழ்வு கலியாணம் எண்டாலுஞ் சரி,பிள்ளேல் பெரியாளான வீடெண்டாலும் சரி ஆருஞ் செத்து முப்பத்தொண்டு அமுது எண்டாலுஞ் சரி... நம்மட சனங்கள் தவறாமல் செய்யிற ஒரு வேலை வளவுக்குள்ள ஒரு லோடு மண்ணேத்திப் பறிக்கிறதுதான்!

இது எவ்வளவு பெரிய பிழையான வேலை என்றது நம்மளுக்கு விளங்கப் போறல்ல.... விளங்கப் போற காலம் நம்மள் சீவனோட இருக்கப்போறதுமில்ல... ...இன்னம் அஞ்சி பத்து வருசத்துக்கு பிறகு பிள்ளை குட்டிகள் கஷ்டப்படுற நேரம் அதுகளுக்கு தான் விளங்கும்!

இப்ப தம்பிலுவில்ல இருக்கிறவங்கள் கொஞ்சநாள் தொடர்ந்து கடக்கரைக்குப் போய் பாருங்கோ... முதல்நாள் பாத்த மண்ணில அரைவாசி மண்ண அடுத்த நாள் காணமாட்டேல்... அதுவுஞ் சிவன் கோயிலுக்கு இஞ்சால இருக்கிற இடம் இருக்கு பாருங்கோ.. எண்ட கண்ணகைத் தாயாரே.....அதில றெக்ரர்ர டயர் தடம் இல்லாத நாளே இல்ல எண்டுவன்.


முந்தியெல்லாம் பொலிசிற்ற அனுமதி கிடச்சா தான் மண்ணேத்தலாம். ஆனாஇ இப்பிடி அனுமதி குடுத்து கொஞ்சநாள்லயே கடல் ஊருக்குள வாற அளவுக்கு நம்மட சனங்கள் கடக்கர மண்ண 'சுவாகா' செஞ்சிற்றுகள் எண்டதும்இ பொலிசு அனுமதி குடுக்கிறத நிப்பாட்டிற்றுது. இப்ப எக்காரணம் கொண்டும் கடக்கரைல மண்ணேத்தப்படாது. அப்பிடி ஏத்தினா அது சட்டப்படி குற்றம்!

ஆனா அநியாயத்தப் பாருங்கோ! இது தெரிஞ்சும் நம்மட சனங்கள் திருட்டுத்தனமா மண்ணேத்துதுகள்... இஞ்ச நம்மட சனம் நம்மட சனம் எண்டு நான் சொல்றது தம்பிலுவில் ஆக்கள மட்டுமில்ல – நம்மட முழு திருக்கோயில் பிரதேசத்திலையும் கடலோரம் இருக்கிற எல்லா ஊர்ச்சனங்களையும் தான்!
மண்ணேத்துற சனங்கள நான் பிழை சொல்றன் எண்டு நினையாதேங்கோ.. நானும் அதில அடங்குற ஆள் தான்... நாலஞ்சி மாதத்துக்கு முதல் நானும் பக்கத்து எல்லமானத்து கலியாண வீட்டுக்கு ரெண்டு லோடு மண்ணேத்திப் போட்டவன் தான்.

ஆனால் கன்னாளைக்கு பிறகுஇ போன கிழமை கடக்கரைக்கு போன நான் அப்பிடியே ஆடிப் போயிற்றன். அங்க கடல் தான் இருந்திச்சி....கரையக் காணல்ல.....நாலஞ்சி மாதத்துக்கு முதல்இ நான் மண்ணேத்துற நேரம் இருந்த மண்ணிலஇ பத்தில ஒரு பாகம் கூட இப்ப இருக்காது.. அடம்பங்கொடி ராவணன்மீசை இதுகள் மட்டும் கொஞ்சம் மண்ண காப்பாத்தி வச்சிருக்குது!

உண்மைலயே கடும் கவலையா போயிற்றுது.. இப்ப நம்மட அக்கம் பக்கம் நடக்கிறதுகள் தெரியும்தானே.. இந்தா ஒலுவில்ல கடல் நல்லா உள்ளுக்கு ஊருக்குள வந்திற்றுதாம்... மட்டக்களப்புலயும் கடல் உள்ளுக்கு வந்தது. நம்மட ஊருக்குளயும் கடல் வரஇ ஒரு வருசமும் ஆகாதெண்டு நினைக்கிறன். (2012 உலகம் அழியுதோ இல்லையோ நம்மட ஊர் அழியும்... அபசகுனமா கதைக்கிறன் எண்டு ஏசவேணாம்.... கடக்கரைக்கு போயிற்றுவந்தால் நீங்களும் அப்பிடி தான் சொல்லுவேல்.....)

சின்னப்பிள்ளைலஇ கடக்கர மண்ணில வீடு கட்டி விளையாடின ஞாபகம் இப்பயும் கண்ணுக்குள இருக்கு. ஏன்இ பத்து பன்ரெண்டு வருசத்துக்கு முதல்கூட சிவன் கோயிலுக்கு முன்னுக்கு - சாயி பாபா சமித்திக்கு கிட்ட - குருகுலத்துக்கு பக்கத்தாலஇ அங்கால 'மோத்தாரப்' பக்கம்இ நீட்டுக்கும் மண்மேடாவே இருக்கும்... அதில இடக்கிடை நீலநிறத்தில கறுப்புமண் ஓடி - அடம்பங்கொடி படர்ந்துஇ பாக்க நல்ல வடிவா இருக்கும். தெரியுந்தானே! சிவன் கோயிலச் சுத்தி அருணோதயா பள்ளி இருக்கிற ஏரியாவுக்கு பெயரே 'மணக்காடு' தான்....அப்பிடி மண் கொழிச்சிக் கிடந்த பூமி அது!

இப்ப மண்மேடு ஒண்டு கூட இல்லஇ போனகிழமை நான் போனநேரம் திருக்கோயில்இ குருகுலப் பக்கம் மட்டும் கொஞ்சம் கடக்கர மண் தெரிஞ்சது.. அது கூட மாரிகாலத்தில வழமயா கடல் ஒதுக்குற மண் தான்... சித்திர – வைகாசி பிறந்தோண திரும்பயும் அங்க கடல் வந்திரும்.

சிவன் கோயிலுக்கும் கடக்கரைக்கும் இடவெளி நல்லா குறஞ்சிற்றுது..முதலே போல திருவெம்பாவைக்கு தீர்த்தமாடிப் போட்டு காலாற நடக்கிற அளவுக்கு இப்ப கடக்கரை இல்ல...:(

கடக்கரைல காத்தாட வாற ஆரக் கண்டாலும்இ கடல் கிட்ட வந்திற்று - கடல் கிட்ட வந்திற்று எண்டு பயத்தோட சொல்றாங்கள்... கடலோ கிட்ட வந்தது...? மண்ணத் தோண்டி தோண்டி நம்மள் தான் கடல கிட்ட வரவச்சம்....??

மண்ணேத்திற கதை இப்ப தொடங்கினது இல்ல... எப்பவோ தொடங்கின ஏழரை அது.... சுனாமில இஞ்ச அரவாசிச் சனம் சாகக் காரணமே மண்மேடு எல்லாம் இல்லாம போனதுதான் எண்டுஇ நான் சொல்லித் தான் தெரியோணும் எண்டில்ல.


இந்தத் தலயிடியப் பாத்துஇ கவலப்பட்டுக் கொண்டே கொஞ்சத் தூரம் நடந்தன்.... சிச்சீ....அசிங்கம் புடிச்சதுகள்.... இந்தச் சனங்கள் திருந்தவே மாட்டாதுகள்.....!!!

எனக்குத் தெரிஞ்சிஇ இண்டைக்கு நம்மட ஊரில மலசலகூடம் இல்லாத வீடே இல்ல எண்டுவன். பிறகென்ன மண்ணாங்கட்டிக்கி கடக்கரைய நாறடிக்குதுகள்?? நல்லா காத்து வாங்கிக் கொண்டு 'போறதில' ஒரு சந்தோசமாக்கும்??

இதுகள்ற அநியாயம் காணாது எண்டுஇ கட்டாக்காலி மாடுஇ நாய் எல்லாம் 'போய்' வச்சிருக்குதுகள்.... அங்கங்க குப்பைஇ கல்லுஇ நரகல்களக் கொட்டி – போத்தலுகள்இ அழுகின மீன் – கொடி கிடி எல்லாம் கிடந்து அப்பப்பா.... அடிக்கிற கடக்காத்தையும் மீறிஇ நாத்தம் குடல பிரட்டுது.. ,:(

எண்ட பங்குக்கு கொஞ்சம் ஏரியாவ பாத்து சுத்தம் பண்ணினன்... அதுக்கும் பயம்இ எங்கெங்க 'என்னென்ன' கைல படுதோ எண்டு பயந்து பயந்து தான் இந்த 'திருப்பணி'ய செஞ்சு முடிச்சன். (வீட்ட வந்து ஒரு லைஃபோய் சவுக்காரத்த முடிச்சன் என்றது தனிக்கதை!!!)


கடக்கரை எவ்வளவு அருமையான இயற்கை வளம் எண்டு இந்தச் சனங்களுக்கு விளங்குதில்ல. இதுகள் நினச்சா இந்தக் கடக்கரய எப்பிடி வச்சிருக்கலாம்..... கொழும்புட காலிமுகத்திடலும் தோத்துப்போகும்.

ஒரு நிமிசம் உங்கட மனச்சாட்சிய கேள்வி கேட்டுப் பாருங்கோ.. ஒருதர் நினச்சி ஒண்டும் செய்யேலாது. எல்லாரும் நினச்சா தான் எதையும் சாதிக்கலாம். எப்பாடு பட்டாகிலும் இத நம்மள் செஞ்சே ஆகோணும்!!!

முதலாவதுஇ கடக்கரய நாறடிக்கிற கும்பல ஊர விட்டுத் துரத்தோணும்..... எப்பிடியாவது அவங்களுக்கு எடுத்துசொல்லி விளங்கவச்சிஇ இந்த 'வேலை' செய்யாமல் தடுக்கப் பாருங்கோ!! சிவன் கோயிலுக்கு பக்கத்திலயும் திருக்கோயிலுக்கு பக்கத்திலயும் கொஞ்சம் பொடியன் தரவளி விளையாடிக்கொண்டு நிண்டத கண்ட நான்... அவங்கள் இதுக்கு பூரணமா முயற்சி செய்யலாம்..

தயவு செய்து ஒருதரும் கடக்கரைல குப்பை – கல்லு இதுகள கொட்டவேணாம் – கொட்டவும் விடவேணாம்... ஊரில கனமா அமைப்புகள் இருக்கு தானே! அவங்கள் மாதத்துக்கொருதரமாவதுஇ இதுல கவனமெடுத்து சிரமதானம் ஏற்பாடு செய்யலாம்இ நாலு மாதமும் கனம்... கடக்கரை சும்ம அந்தமாதிரி பளபளக்கும் :)

இந்த பிரதேச சபை என்னத்த தான் பாத்துக் கொண்டிருக்குதோ தெரியல்ல. கிழமைக்கு கிழமை ஊர்வலம் வாற அதுட குப்பை வண்டிய கடக்கரைக்கு அனுப்பினாஇ ரெண்டு நாள்ல கடக்கரை சுத்தமாகுமே!

எல்லாத்தயும் விட கடும் முக்கியம் மண்ணேத்துறது! உங்கள்ட்ட கெஞ்சிக் கேக்கிறன்; என்ன செஞ்சாவது இத நித்தாட்டப் பாருங்கோ... நான் இதில இனி தீவிரம்தான்.. சொந்தபந்தம் எல்லாம் பாக்கப் போறல்ல... ஆராவது மண்ணேத்திறதக் கண்டா உடனே பொலிசுக்குச் சொல்ற எண்டுதான் இருக்கன்!

வீடு கட்ட – சாமான் சக்கடு புக்கடு எண்டுஇ எல்லாத்துக்கும் மண் தேவைதான்.... நான் இல்லண்டு சொல்லல்ல.... ஆனா குறஞ்சபட்சம்இ கலியாணம் – காட்சிக்கி மண்ணேத்துறதையாவது நிப்பாட்டுங்கோஇ வாழ்வு – சாவுக்கெண்டு வாற சனம் மண்ணப் பாக்கப்போறல்லேஇ நம்மட மனசதான் பாக்கும்!

விஞ்ஞானம் வளர்ரதோடஇ மனிசன்ட தேவைகளும் வளருது. அதுக்காக இயற்கைய போதுமான அளவு பாவிக்க நம்மளுக்கும் உரிமை இருக்கு தான். ஆனா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கோணும்... வரம்பு மீறினமெண்டா இயற்கைர தண்டனைல இருந்து நம்மள் தப்பேலாது!

இப்ப கடக்கரை கிடக்கிற கிடைக்கிஇ 2004 சுனாமி இல்லஇ அதவிட சின்னொரு சுனாமி வந்தாலும்இ கடல் நல்லா ஊருக்குள வந்திரும்.... பிறகு 'விடைகொடு எங்கள் நாடே' எண்டு பாட்டு படிச்சிக் கொண்டு எங்கெண்டான போகவேண்டியதுதான்...! (இது நான் சிரிக்கிறதுக்கு சொல்லல்லஇ உண்மையாவே கவலையோட சொல்றன் :'(

நெஞ்சில கைய வச்சிஇ நீங்களும் கொஞ்சம் யோசிங்கோ! இனியும் மண்ணேத்துறத அப்பிடியே விட்டமெண்டா வாற வருசம் இந்த 'நெற்'றில இந்த கட்டுரை இருக்கும்இ வெளிநாட்டில இருக்கிறவங்கள் அப்பிடியே இருப்பீங்கள்.... ஆனாஇ இஞ்ச ஊரோ சனமோ ஒண்டும் இருக்காது....

அப்பனே சித்திவிநாயகா - சித்திரவேலாயுதா – கண்ணகைத் தாயே நீங்க தான் எல்லாரையும் காப்பாத்தோணும்!!!

- ஊரான்.

---
Read more

Wednesday, January 25, 2012

தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் மீள குடியேற்றப் பட இருக்கும் மக்களுடன் விசேட கலந்துரையாடல்

 திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம்,சாகாமம்,காஞ்சிரங்குடா ஆகிய கிராமங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட
Read more

எமது நன்றிகள் - Our Thanks

எமது இணையதள வளர்சியில் பங்களித்துவரும் அனைவருக்கும் எமது நன்றிகள் .  எமது தளம் பற்றி கருத்துகள் தெரிவித்தவர்களுக்கு எமது நன்றிகள் 

  • எமது இணையத்திற்கு கனடாவில் இருக்கும் எஸ் .கனகசபாபதி அவர்கள் ஸ்கேனர் ( Scaner)   வழங்கி இருந்தார் அவருக்கு எமது நன்றிகள் .
  • இந்த வருடத்திற்கான Thirukkovil.com எனும் முகவரிக்கான கட்டணத்தை கோவிலூர் செல்வராஜன் அவர்கள் வாங்கி தந்தார் அவருக்கும் எமது நன்றிகள் 
மேலும் எங்களது இணையத்திற்கு ஒரு புகைப்பட கருவி தேவையாக உள்ளது , இதற்கு உதவ விரும்புபவர்கள் உங்களது பங்களிப்பை செய்யுங்கள் 


Our e-mail  -  thambiluvil@gmail.com


--
Read more

Sunday, January 22, 2012

தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கி சாதனம் திருடப்பட்டுள்ளது ....

தம்பிலுவில் ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலயத்தில் கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலய கதவு உடைக்கப்பட்டு
அங்கிருந்த ஒலிபெருக்கி சாதனங்களும் மற்றும் அங்கிருந்த பொருட்களும்
களவாடப்பட்டுள்ளது
திருடியவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்க படவில்லை
இது குறித்து பாராளமன்ற
உறுப்பினருக்கு அறிவித்தபோது
இரண்டு மூன்று தினங்களுக்க்குள் புதிதாக வாங்கி தருவதாகவும் ,
மற்றும் சுற்று மதில், இரும்பில் கதவு போட்டு தருவதாகவும் கூறியிருந்தார்
Read more

Saturday, January 21, 2012

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாறு - பகுதி - 1

தம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - 1 (ஆலய வரலாறு)


BY-Thulanch Viveganandarajah

கற்பரசி கண்ணகி...! சிலம்பின் நாயகி! அறங்கடந்த பாண்டியனுக்கு மறக்கருணை புரிந்த மாதரசி! உலகெலாம் வாழும் தமிழரில் அவளை அறியாதார் கிடையாது.

தமிழகம் பெற்றெடுத்த அந்தப் பொற்புடைப் பெண்ணரசியைத் தெய்வமாக்கி அழகு பார்த்தது ஈழவளநாடு! அத்தகைய பழம்பெரும் கண்ணகி ஆலயங்களில் ஒன்று தான் தம்பிலுவில் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்!

மட்டக்களப்புக்குத் தெற்கேஇ 69 கி.மீ தொலைவிலுள்ள தம்பிலுவிற்பதியின் இதயத்தானமெனஇ கிராமத்தின் நடுவண் அமைந்து விளங்குகிறது அம்மன் ஆலயம்.
ஆலய அமைப்பு:-

ஆலும் தெங்கும் வம்மியும் நிறைந்து அடர்சோலையாய்க் காட்சியளிக்கும் அழகான அமைவிடம். மேற்கே குளிர்தென்றலைப் பரப்பியவாறு பெரியகளப்பென்னும் வாவி ஆலயத்தை அணிசெய்து நிற்கும். தெற்கே நன்செய் நிலமாகவும்இ மாரி காலத்தில் வாவியின் வெள்ளத்தால் நிரம்பி இன்னொரு வாவியாகவும் காட்சி தரும் 'பள்ளவெளி'யெனும் வயற்பரப்புஇ இத்தகைய இரம்மியமான சூழலில் தான் அமர்ந்து அருள் புரிகிறாள் கண்ணகித் தாய்              
.

ஆலயத்தின் கிழக்கு வாசல் வழியே நுழைந்தோமானால்இ சற்று இடப்புறம் தென்படுவது தீராப்பிணிதீர்க்கும் தீர்த்தக்கேணி. நோயாளர்கள் இதில் நீராடி நோய்நீங்கிய விந்தையையும்இ பூச்சிநாசினிகள் அறிமுகமாகாத காலத்தில்இ இந்நீர் தெளிக்கப்பட்ட வயல்கள்இ பீடைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட அற்புதங்களையும் இவ்வூர்முதியவர்கள் கதை கதையாய்ச் சொல்வார்கள்.

அம்மன் ஆலயத்தின் ஓடு வேய்ந்த மடாலய அமைப்புஇ கேரளத்துப்பாணியை ஞாபகமூட்டுவதுடன்இ இவ்வாலயத்தின் பழமைக்கும்இ சேரநாட்டுடனான மட்டக்களப்புத் தமிழகத்தின் பூர்வீகத் தொடர்பிற்கும் ஆதாரம்கூறி நிற்கின்றது.

வடக்கு நோக்கிய கருவறைஇ அதையடுத்துள்ள இருமண்டபங்கள்இ அதற்கு வெளியே அடியார் குழுமும் தரிசனமண்டபம். இவற்றைக்கொண்ட எளிய அமைப்பில்தான் ஆலயம் அமைந்துள்ளது. கருவறையும் அதையடுத்துள்ள அர்த்தமண்டபமும் விழாக்காலம் தவிர்ந்த நாட்களில் மூடியே இருக்கும்.

மூடப்பட்டுள்ள திருக்கதவின்முன்னே அம்மையின் ஓவியம் எழுதிய திரை ஒன்று எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். வாராந்தப்பூசைகளும்இ நேர்த்திக்கடன் பூசைகளும் இவ்விடத்திலேதான் இடம்பெறுகின்றன.

ஆலயம் இரு திருச்சுற்றுக்களைக்(வீதி) கொண்டது. இவற்றில் பிள்ளையார்இ நாகதம்பிரான்இ வைரவர் ஆகிய பரிவாரதேவதைகளுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயக் கிழக்குவாசலுக்கு நேரெதிரே தென்படுவது பிள்ளையார் சன்னதி ஆகும். ஆரம்பகாலத்தில் மேடையொன்றில் அமர்ந்திருந்த பிள்ளையாருக்கு காலப்போக்கில் அமைக்கப்பட்ட சிறு கருவறைஇ அண்மையில் திருத்தப்பட்டுஇ குடமுழுக்குச் செய்யப்பட்டுஇ இன்றையநிலையில் காட்சியளிக்கிறது.

உள்வீதியின் தென்கிழக்கு மூலையில்இ நாகதம்பிரான் சன்னதியை தரிசிக்கலாம். முன்பு உள்வீதி வாயிலில் மேற்கு நோக்கி அமைந்திருந்த இதுஇ தற்போது புதிதாகக் கட்டப்பட்டு குடமுழுக்கும் கண்டிருக்கிறது.

வெளிவீதியில்இ அம்மன் சன்னதிக்கெதிரேஇ தெற்குநோக்கிஇ வைரவர் சன்னதி அமைந்துள்ளது. அண்மைக்கால திருப்பணிகளுக்குப் பிறகுஇ இச்சன்னதிஇ ஆலய தரிசனமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காலம்காலமாக வழிபடப்பட்டுவரும் வைரவர் தடிகளே இங்கு பூசிக்கப்படுகின்றன.

இவற்றைத் தவிரஇ விழாக்காலங்களில் மட்டும் பூசிக்கப்படும்இ அட்டதிக்குப்பாலகர்களுக்கான எட்டு பலிபீடங்கள் உள்வீதியின் வெளிச்சுவரைச்சார்ந்து அமைந்துள்ளன.

பழம்பெருமை வாய்ந்த இவ்வாலயம் இன்றும் சுமார் 300 வருடங்களை அண்மித்த பழைமை மாறாமலேயே காட்சி தருகிறது. 2000ஆம் ஆண்டளவில் ஆலயம் குடமுழுக்குக் கண்டபோதும்இ பழைய அமைப்பு மாறாத வகையிலேயே திருப்பணி செய்யப்பட்டு இன்றைய தோற்றத்தில் காட்சியளிக்கிறது.


தேவியின் சிறப்பு :-

கருவறையிலுள்ள விக்கிரகம் சுமார் 1' உயரமானது. வைகாசிப் பொங்கல் வேளையில் மட்டும் தரிசிக்கக்கூடிய அந்த விக்கிரகத்தின் அழகுஇ வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது.

தேவியின் விக்கிரகம் வயதுமுதிர்ந்த கருணை நிறைந்த மூதாட்டியொருத்தியைப் போலவே காட்சிதருகிறது. இவ்வூர் மக்களால் 'அம்மம்மா' என்றும்இ வன்னி மக்களால் 'அம்மாளாச்சி' என்றும் உரிமையுடன் கொண்டாடப்படும் கண்ணகைத்தாய்க்குஇ அவ்வுரிமைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதைஇ அம்மனைத் தரிசிப்பதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.

வலக்கரத்தில் வேப்பங்குழை ஏந்தி இடக்கையைத் தொங்கவிட்டுஇ அள்ளிமுடிந்த கொண்டைஇ நீண்டுதொங்கும் காதணிஇ விபூதிபரந்த நெற்றிஇ கருணை ததும்பும் கண்கள் எனப் பழங்கால தமிழ்மறவப்பெண்ணாகக் காட்சி தரும் அவள்தன் அழகோ அழகு! நடுவயதை எட்டிய முதிர்ந்த குடும்பத்தலைவி ஒருத்திக்குரிய கம்பீரம்இ பெருமிதம்இ தாய்மைஇ கருணை யாவுமேஇ அவள் முகத்தில் பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.

அன்னையைத் தரிசிக்கும் எவர்க்குமேஇ தன் தாயை அல்லது பாட்டியைக் காணும் உணர்வு தோன்றுமே தவிரஇ தெய்வத்தின்முன் நிற்கும் உணர்வே தோன்றாது. எத்தனைபேரால் இழித்துரைக்கப்பட்டாலும்இ கடவுளுக்கும் அடியவனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதில்இ கிராமியவழிபாடு வெற்றிகண்டுவிட்டது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று!

மூலவிக்கிரகத்தைத் தவிரஇ உற்சவரும் இங்கு உண்டு. அபயம்இ வரதம்இ சிலம்புஇ வேப்பங்குழை என்பவற்றை ஏந்திஇ நாற்கரத்தினளாகஇ தன் தெய்வவடிவில் கண்ணகி காட்சி தரும் கோலம் அது! அளவிற்சிறியதும் காலத்தாற் பிற்பட்டதுமான இவ்விக்கிரகமேஇ ஊர்வலத்திலும்இ திருவீதியுலாவிலும் பங்குகொள்கிறது.

இவற்றைத் தவிரஇ திருவீதியுலாவில் முக்கியத்துவம் பெறுவதுஇ அம்மன் முகக்களை ஆகும். ஏடகஞ் செய்து அம்மனை ஊர்வலத்துக்கு எடுத்துச் செல்லமுன்இ முன்னாட்களில்இ இம்முகக்களையேஇ ஊர்வலஞ் சென்றதாக பெரியோர் சொல்வர். வேப்பிலை – கமுகம்பாளை என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டுஇ அடியவர் ஒருவரால் சுமக்கப்பட்டுஇ வீதியுலாஇ ஊர்வலம் என்பவற்றில் பங்குகொள்ளும் அம்மன் முகக்களையிலேயேஇ அம்மன் எழுந்தருளுவதாக சொல்லப்படுகிறது.

அதற்குக் கட்டியம் கூறுவதுபோல்இ அதைச் சுமப்பவர்இ சிலவேளை சுயநினைவிழப்பதையும்இ இருந்தாற்போல் அதுஇ தானாகவே சிலிர்த்தாடுவதையும் இன்றும் உற்சவ காலத்தில் கண்டு நெகிழலாம்.

இரு தசாப்தங்களுக்கு முன்வரைஇ இங்கு 'பச்சைப்பானை'யில் (சுடாத களிமண் பானை) பொங்கல் பொங்கிப் படைத்த அற்புதத்தைஇ இன்றும் பெரியவர்கள்இ சிலிர்ப்போடு விவரிக்கிறார்கள். பானை உடைந்துவிடும் என்ற அவநம்பிக்கையாலும்இ உடைந்தால் அது அபசகுனம் என்ற அச்சத்தாலும்இ இன்று இவ்வற்புதத்தை நிகழ்த்திக்காட்ட யாரும் முன்வருவதில்லை!

17ஆம் நூற்றாண்டில்இ மழைபொய்த்தபோதுஇ இவ்வாலயப் பூசகர் கண்ணப்பர்இ அம்மன் மீது 'மழைக்காவியம்' பாடிஇ மழை பொழியவைத்த அற்புதமும் நடந்திருக்கிறது. இன்றும்இ மழை பொய்த்துப்போகும் சந்தர்ப்பங்களில்இ அதைஇ பயபக்தியுடன் பாடும்போதுஇ மழை பெய்வது கண்கூடு.

வரலாற்றுப்பின்னணி :-

ஈழத்துப்பழங்குடிகளான நாகரும் வேடரும் குடியிருந்த பழம்பெரும் கிராமம்இ தம்பிலுவில். இங்கு ஆதியிலிருந்தே விளங்கிய தாய்த்தெய்வ வழிபாடேஇ தமிழகத்தொடர்புகளை அடுத்துஇ பிற்காலத்தில் கண்ணகி வழிபாடாக பரிணமித்தது எனக்கொள்ளமுடியும்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டில்இ இலங்கை மன்னன் கஜபாகுவால் தொடங்கிய கண்ணகி வழிபாடுஇ அவன்மூலமாகவே இங்கு வந்ததென்றும்இ வற்றாப்பளையிலிருந்து இங்கு பரந்ததென்றும்இ கண்டிமன்னர் காலத்தில் அங்கிருந்து இங்கு பரவியதென்றும்இ யாழ்ப்பாணத்திலிருந்து நாடார் குடியேற்றம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இவ்வாறு பல்வேறு ஊகங்கள் காணப்பட்டாலும்இ கண்ணகி வழிபாடு தெற்கிலிருந்து வந்ததாகக் கூறுவதே மட்டக்களப்பு வழக்கு என்பது ஊன்றி நோக்கவேண்டிய விடயம். 'அம்மாள் தெற்கிலிருந்து வடக்கே பறந்து வந்தாள்' என்பதுபோல் விளங்கும் செவிவழிக்கதைகளும் இக்கருத்து சார்பாக எழுந்தவையே எனலாம்.

இதை வைத்து நோக்கும்போதுஇ (பண்டைய) மட்டக்களப்புத் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்த கண்ணகி ஆலயங்கள் என்றவகையில்இ பாணமைஇ தம்பிலுவில்இ பட்டிமேடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை மூன்றனுள்ளும் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயமே பழமை வாய்ந்ததாகவும்இ வரலாற்றோடு அதிகதொடர்பு வாய்ந்ததாகவும் இனங்காணப்பட்டுள்ளது.

அவ்வகையில் மட்டக்களப்புத்தேசத்தின் கண்ணகி வழிபாட்டின் பிறப்பிடம் என்று தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தைக் கூறலாம்!

சரித்திரக்குறிப்புக்கள்இ கஜபாகு இலங்கையில் பத்தினிவழிபாட்டை அறிமுகஞ் செய்த சிலவருடங்களுக்குள்ளாகவே இங்கும் கண்ணகி வழிபாடு அறிமுகமானதையும்இ அதுஇ கஜபாகு அல்லது சிங்கள அரசின் மூலம் அன்றிஇ நேரடியாகப் பாரதத்திலிருந்தே வந்துசேர்ந்ததையும் கூறிச் செல்கின்றன.

பட்டிமேட்டுக் கண்ணகி அம்மனுக்குரிய 'பொற்புறா வந்த காவியம்' கலி. 3300இற்கு (கி.பி.198) அண்மையான காலப்பகுதியில் தம்பிலுவில்லிலும் அடுத்து இறக்காமம்இ பட்டிமேடு என்பவற்றிலும் கண்ணகி ஆலயங்கள் உருவானதாகக் கூறுகிறது.

இதுஇ கி.பி 178இல் இடம்பெற்ற சேரன் செங்குட்டுவனின் கண்ணகி விழாவை அடுத்துஇ தமிழகத்தில் கண்ணகி வழிபாடு அறிமுகமாகித் தீவிரமாகப் பரவியது என்ற சிலப்பதிகாரக்குறிப்போடு (வஞ்சிக்காண்டம் - வரந்தருகாதை) ஓரளவு ஒத்துப் போகின்றது என்பது நோக்கற்பாலது. இவ்வாறு தமிழகமெங்கும் பரவிய வழிபாடுஇ ஈழத்தையும் நேரடியாகச் சென்றடைதல் என்பது சாத்தியமான ஒன்றேயாம். அதைக் கீழ்க்காட்டும் குறிப்பு உறுதிசெய்கிறது.

தமிழகத்தினின்று கொணரப்பட்ட காளியம்மன்இ செண்பகநாச்சியம்மன்இ கண்ணகியம்மன் ஆகிய மூன்று அம்மன் விக்கிரகங்கள்இ திருகோணமலைஇ இலங்கைத்துறைஇ கந்தபாணத்துறை ஆகிய மூன்று பண்டைத்துறைமுகங்களூடாக இலங்கையை அடைந்துஇ சம்பூர்இ ஈச்சிலம்பற்றைஇ தம்பிலுவில் ஆகிய மூன்று இடங்களில் தாபிக்கப்பட்டதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு உண்டு. இதுஇ தமிழகத்திலிருந்தே இப்பகுதிக்கு கண்ணகி வழிபாடு அறிமுகமானது என்ற கருத்தை உறுதி செய்கிறது.

செண்பகநாச்சியம்மனோடு இலங்கை வந்த காரணமேஇ தம்பிலுவில் கண்ணகிக்கும் செண்பகநாச்சியம்மன் அல்லது செண்பகவல்லியம்மன் எனும் சிறப்பான பெயர்கள் அமையக் காரணமாகிற்றுப் போலும்.

இவ்வாறு வந்து சேர்ந்த அம்மனுக்குஇ இன்று தம்பிலுவிலுக்கு மேற்கே பரந்து காணப்படும் 'ஊரக்கைவெளி'யில் ஆலயம் எழுந்ததாகவும்இ ஏதோகாரணத்தால் சிலகாலம் புகழ்மங்கிஇ அவ்வாலயம் சிதைந்துபோக சிறிதுகாலத்தின் பின்இ ஒரு புறாவின் மூலம்இ அம்மன் விக்கிரகத்தின் இருப்பிடம் ஊரவர்க்கு இனங்காட்டப்பட்டதாகவும்இ அதை அடுத்து மீண்டும் அன்னைக்கு கோவில் எழுப்பப்பட்டதாகவும் மரபுரைகள் வழங்குகின்றன.

இவ்வாறுஇ ஊரக்கைவெளியில் அமைந்திருந்த அம்மன் ஆலயம் பிற்காலத்தில் தம்பிலுவில்லுக்கு இடம்பெயர்ந்தாலும்இ மழைபொய்த்துப் போகும் சந்தர்ப்பங்களில்இ அம்மனைஇ மீளவும் ஊரக்கைவெளிக்கு எடுத்துச்சென்று இருத்திஇ மழைபொழியும் வரை பூசனை புரிவது வழக்கமாக இருந்துள்ளது. 'தம்பிலுவில் மழைக்காவியத்தின்' மூலம்இ இவ்வழக்கம்இ ஒல்லாந்தர் காலம் வரை இருந்துள்ளது என அறியமுடிகின்றது.

இப்பகுதியைப் பல்வேறு காலகட்டங்களில் ஆண்ட மட்டக்களப்பு மன்னர்இ சோழர்இ பொலநறுவை மன்னர்இ யாழ்ப்பாண மன்னர்இ கண்டி மன்னர்இ பாண்டியர் போன்றவர்களால்இ மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக்கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம் திருப்பணி கண்டதை பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தமுடிகின்ற அதேவேளைஇ திருக்கோவிலை அடுத்துஇ பிரசித்திபெற்று விளங்கிய இவ்வாலயமும் அவர்களின் திருப்பணிகளைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சோழர்தலைநகரம் தஞ்சையில் 'சிங்களநாச்சி' என்ற பெயரில் கண்ணகிக்குக் கோவில் எழுந்தமை (இக்கருத்தில் மாறுபாடுடையோரும் உண்டு)இ சோழரை வென்ற 1ஆம் விசயபாகுவால் இவ்வாலயத்துக்கு நேர்த்தியாக வழங்கப்பட்ட அம்மானைக்காய்கள்இ பொற்சிலம்பு என்பன இன்றும் ஆலயத்தில் உள்ளமைஇ திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயத்திலுள்ள 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'தம்பிலுவில் கல்வெட்டு' இங்கிருந்தே பெறப்பட்டமைஇ குளிக்கல்வெட்டுப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டப்பத்தான்குடியினரே இவ்வாலய நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருக்கின்றமைஇ தம்பிலுவில் கண்ணகியோடு தொடர்புடைய நாட்டார் இலக்கியங்கள் யாவும் கண்டி மன்னர்களைப் புகழ்ந்துரைக்கின்றமை என்று தொடரும் ஆதாரங்கள் மூலம் மேற்கூறிய கருத்தை உறுதிசெய்யமுடிகின்றது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற அம்மன் ஆலயத்தின் பெருவிழாவாக அமைவது 'வைகாசிப்பொங்கல்' ஆகும். அதன் சிறப்பையும் ஆலயம் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்களையும் அடுத்த பதிவில் பார்ப்போமா?

'அம்பிகை சடாட்சரி மனோகரி பராபரி ஆனந்தரூபி அகிலாண்ட நாயகி
தும்பிமுகனைப் பெற்ற காரணி நாரணி தூய பங்கயபாத பூரணிமாதங்கி
நம்புமடியார்கள் வினை நோயகல நாளும் நயமான மழைதந்து நெல்விளைவு தருவாய்
தம்பிலுவில் மாநகரில் வீற்றினிதிருக்கும் தாயே யிரக்கமுள்ள தருமதேவதையே!'

- அம்மன் ஊர்சுற்றுக்காவியம் 16.
---
Read more

Thursday, January 19, 2012

தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் வீதிவிபத்தில் ஒருவர் படுகாயம்

 
தம்பிலுவில் இன்று வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளும்; பஸ்வண்டியும் நேருக்கு நேர் மோதி
இடம்பெற்ற வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தாதி
உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்

தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதி வளைவில் சம்பவதினமான இன்று காலை 7.30 மணிக்கு அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவிலுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்வண்டியும் தம்பிலுவிலில் இருந்நு அக்கரைப்பற்றுக்கு சென்ற மோட்டடர்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த தாதி உத்தியோகத்தர் நல்லதம்பி பிரதீபன் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்றுஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இத தொடர்பான விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
---
Read more

Tuesday, January 17, 2012

கணவர் காணாமல் போனதால் மனைவி தற்கொலை; கணவர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்ட நிருபர்

கணவன் குளத்தில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன சம்பவத்தையடுத்து மனைவி
சோகம் தாங்காது நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டு திருமணபந்தத்தில்
ஒன்றினைந்தவர்கள் இணைபிரியாது உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை
திருக்கோவில் கஞ்சிக்குடியாறு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் பிரதேசமே
சோகமயமாகவுள்ளது.
திருக்கோவில் கஞ்சிக்குடியாற்று குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
மீன்பிடிக்க சென்ற கஞ்சிக்குடியாறு பிரதேசத்தை சேர்ந்த மீனவரான நான்கு
பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய செல்லத்துரை நடேசப்பிள்ளை காணாமல் போன
இவரை தேடிகிடைக்காத நிலையில் இவரது மனைவியான 55 வதுடைய அலகோஸ்வரி
திங்கட்கிழமை மாலை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
ஓப்படைக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன கணவர் குளத்தில் சடலமாக
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம்
பிரோதபரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
ஓப்படைக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
இச்சம்பவத்தையடுத்து பிரதேசமே சோகமயமாகவுள்ளது
---
Read more

Monday, January 16, 2012

கஞ்சிக்குடியாறு குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் காணாமல் போயுள்ளார்


திருக்கோவில் கஞ்சிக்குடியாறு குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் நேற்று
ஞாயிற்றுக்கிழமை மாலை காணாமல் போயுள்ளார் என திருக்கோவில் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்தஜெயசூரிய தெரிவித்தார்
கஞ்சிக்குடியாறு பிரதேசத்தை சேர்ந்த மீனவரான 62 வயதுடைய செல்லத்துரை
நடேசப்பிள்ளை என்பவரே காணாமல் போயுள்ளார். இவர் சம்பவதினம் மாலை 5 மணிக்கு
வழமைபோல கஞ்சிக்குடியாறு குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் இரவு 7 மணியாகியும்
வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிச்சென்ற போது குளத்தின் கரையில்
கல்ஒன்றின் மீது வலை இருப்பதையும் தோணி தண்ணீரில் மூழ்கிய நிலையில்
இருப்பதையும் மீனவரை அங்கு தேடியும் காணவில்லை
இது தொடர்பாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து
பொலிசார் அங்கு தேடுதல் நடாத்தி அவரைக் கண்டுபிடிக்கவில்லை எனவும் சிலவேளை
இவரை முதலை கடித்து இழுத்துச் சென்றிருக்கலாம் எனவும் குளத்தில் நீர்மட்டம்
அதிகரித்து இப்பதால் கடற்படையின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடாத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இத தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்---
Read more

Sunday, January 15, 2012

அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இன்று (2012 – 01 - 15) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்இ உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை' (குறள்)
என்று பொய்யாமொழிப்புலவரால்இ உலகப்பொதுமறையில் போற்றப்படும் உழவுத் தொழிலேஇ தைப்பொங்கலின் அடிப்படை. பொதுவாக தைமாதமானதுஇ வயல்களில் அறுவடை தொடங்கும் காலமாகவும் இருப்பதால்இ உழவுத் தொழிலுக்கு கைகொடுத்துஇ உழவரை வாழவைக்கும் சூரியனுக்கு விழாவெடுக்கும் நாளாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
சூரிய வழிபாடு மிகப் பழைமையானது. பல நாகரிகங்களிலும் வளர்ச்சி பெற்றிருந்த சூரிய வழிபாடுஇ தமிழர் மத்தியில்இ சங்கமருவிய காலத்தில் (கி.பி 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகள்) கூட வழக்கத்திலிருந்தது எனலாம். அக்கால இலக்கியமான சிலப்பதிகாரத்தின் வாழ்த்திலேயேஇ 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று தான் தொடங்குகிறார் இளங்கோ அடிகள்.

சூரிய ஒளி இன்றேல்இ தாவரங்களால் ஒளித்தொகுப்பு எனும் உயிரியல்செயற்பாட்டை நடத்திஇ உணவு தயாரிக்கமுடியாது என்பது விஞ்ஞானம் கூறும் உண்மை. இந்த உண்மையை என்றோ உணர்ந்திருந்த நம் முன்னோர்கள்தான்இ வேளாண்மைச் செய்கையில் சூரியனின் இன்றியமையாமையை உணர்ந்துஇ அந்த வளத்தைத் தந்த இயற்கைக்கு நன்றி செலுத்துமுகமாக தை மாதத்து முதன்னாளை தைப்பொங்கலாகக் கொண்டாடத் துவங்கினர்.
இதுஇ உழவர் திருநாள் என்றுஇ ஒரு வகுப்பினர்க்கு மட்டும் வகுக்கப்பட்ட விழா அல்ல. முழுத் தமிழரும் சாதி – மத – பேதம் கடந்து கொண்டாடும் பண்டிகை. தமிழனின் தொன்மையை – அவனது உழைப்பின் பெருமையை – நன்றி மறவா நற்பண்பை - உறவுகளோடு நெருக்கத்தை வளர்க்கும் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் கூறும் உன்னதப் பெருவிழா!
தமிழகத்தில்இ தைப்பொங்கலின் தொடர்ச்சியாக நாளை பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஈழத்தில் தைப்பூசமன்றே பட்டிப்பொங்கல் கொண்டாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உழவியந்திரங்கள் – அறுவடை இயந்திரங்களின் அறிமுகத்துக்கு முன்இ விவசாயிக்கு தோள் கொடுத்துஇ அவனோடு இணைந்து வருந்தி உதவிய எருதுகளுக்கும்இ பாலை வழங்கியும்இ சாணம்இ திருநீறு போன்ற ஆன்மிக அடையாளங்களை வழங்கும் பசுக்களுக்கும் விழாவெடுக்கும் திருநாள். கேவலம் மிருகம்தானே என்று ஒதுக்காமல்இ அவற்றையும் ஒரு உயிராய் மதித்துஇ அவற்றுக்கு நன்றி செலுத்தக்கூட ஒரு நாளையே ஒதுக்கியிருக்கின்றனர் நம் முன்னோர்கள் எனும்போது அவர்களது சீவகாருணியத்தை நினைந்து பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை.

தமிழர் திருநாள்இ இவ்வருடமும் நமது பிரதேசத்தில் வழக்கம்போல களைகட்டியுள்ளது. புத்தாடை புனைந்து பொங்கி மகிழ்ந்துஇ ஆலயம் சென்று வழிபடுவதோடு நிறுத்திவிடாமல்இ வழியில் எங்கேனும்இ ஏழைகள்இ பிச்சைக்காரர்கள் கண்டால்இ அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்துவிட்டு வாருங்கள். அப்போது அவர்கள் மனம்நிறைந்து அடையும் மகிழ்ச்சியும்இ மனமார அவர்கள் தரும் ஆசீர்வாதமும் தான் உங்களுக்கு உண்மையான செழிப்பையும் தைப்பொங்கலின் முழுமையான மகிழ்ச்சியையும் தரும்! வாழ்த்துக்கள்!

Thanks- V.Thulanjanan
---
Read more

Friday, January 13, 2012

திருக்கோவில் பிரதேச செயலாளர் கோபாலரத்தினம் கடமைகளை பொறுப்பேற்பு

திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை அண்மையில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா, மாகாண சபை உறுப்பினர் எம்.செல்வராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டது.


Read more

சங்கமன்கண்டி - காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் யானை அட்டகாசம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள சங்கமன்கண்டி - காட்டுப் பிள்ளையார் ஆலயத்திற்குள்  நுழைந்த யானையொன்று ஆலயத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஆலய வளாகத்திற்குள் நுழைந்த யானை ஆலயத்தின் பின்பகுதி அறைக் கதவுகளை உடைத்ததுடன், அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் பூஜை பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது.  

கடந்த காலங்களிலும் ஆலய வளாகத்திற்குள்  யானைகள் நுழைந்து அங்குள்ள கட்டிடங்களைச் சேதப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.








Read more

Monday, January 09, 2012

தம்பிலுவிலை சேர்ந்தவர் நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டு பரிதாப மரணம்

Report By - R.Sayan
தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டர் .
மிகவும் பரிதாபமான சம்பவம் ..

இந்த சம்பவம் தொடர்பாக நாம் கொத்மலை பொலிசாரை தொடர்புகொண்டோம் .. அவர்கள் எமக்கு சில தகவல்களை வழங்கியிருந்தனர்
மேலும் இது சம்பந்தமாக ஒருவர் பிடிக்கப்படதகவும் இது பற்றிய முழு தகவலையும் மின்னஞ்சலில் எமது தளத்திற்கு அனுப்பவதாகவும் பொலிஸ் அதிகாரி முனசிங்க தெரிவித்தார்

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது :

தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் .இவர் வெள்ளவத்தையிலுள்ள வாகன உரிமையாளரிடம் சாதியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த மூன்றாம் திகதி மாலை 3 மணியளவில் சுவிஸ் மற்றும் சவூதி ஆகிய நாடுகளிலிருந்து வந்த இருவருடன் தான் கதிர்காமம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
எனினும், வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்காததையடுத்து வாகன உரிமையாளர் வெள்ளவத்தை பொலிஸில் இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.
கண்டி – நுவரெலியா வீதியில் மீட்கப்பட்ட கழுத்து வெட்டி கொலை செய்யப் பட்ட நிலையில் சடலம் தொடர்பாக தகவல் கிடைக்கவே மேற்படி வாகனத்தின் உரிமையாளரும் சாரதியின் நண்பர்கள் சிலரும் நாவலப்பிட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டனர். இதன்போது சடலம் மேற்படி வாகன உரிமையாளரால் தேடப்பட்ட சாரதி கமலராஜ் என்பவரது என்று உறுதி செய்யப்பட்டது.
மேற்படி சடலம் கடந்த 4 ஆம் திகதி காலை கண்டி – நுவரெலியா வீதியோரமாகவுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அருகிலிருந்து கொத்மலை பொலிஸாரால் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வீழ்ச்சிக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதாக பிரதேச வாசிகள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர். எனினும் சடலம் தொடர்பான அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதிருந்ததினால் அடையாளம் காண்பதற்காக பொலிஸார் சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைத்திருந்தனர். முகம் சுற்றிக் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்ட இச்சடலத்தின் கழுத்து வெட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை கடத்திச் செல்லப்பட்ட வாகனம் புதிய ரக வான் ஒன்று என தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தால் ஊரே சோகத்தில் உறைந்து போய் உள்ளது..

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றி விரைவில் அறிய தருவோம்
Report By -R.Sayan


தம்பிலுவிலை சேர்ந்தவரை கொலை செய்துவிட்டு கடத்தப்பட்ட வாகனம் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு - http://www.battinews.com/2012/01/blog-post_9287.html


---
Read more

Tuesday, January 03, 2012

கண்ணீ ர் அஞ்சலி அமரர் பரமலிங்கம் நித்தியானந்தன்

கண்ணீ ர் அஞ்சலி அமரர் பரமலிங்கம் நித்தியானந்தன்
(தொழில் நுட்ப் உத்தியோகத்தர்.சுகாதாரத் திணைக்களம். வவுனியா)
உன் பிரிவால் துயருறும்
இந்து மாமன்றம்
தம்பிலுவில்
Read more

Friday, December 30, 2011

திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரெத்தினம் உருவப்படம் பதிக்கப்பட்ட முத்திரை வெளியீடு...

இலங்கை தபால் திணைக்களத்தினால் சிறந்த சமூக சேவையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வுக்கமைய திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரெத்தினம் அவர்கள் சிறந்த சமூக சேவையாளராக தெரிவு செய்யப்பட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் அவரின் உருவப்படம் பதிக்கப்பட்ட 5ருபா முத்திரையாக வெளியிடப்பட்டு கெளரவம் பெறுகின்றார்.


போட்டோவை பெரிதாக பார்ப்பதற்கு போட்டோ மீது கிளிக் செய்யுங்கள்


Read more

Monday, December 26, 2011

சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால் குளிர்பான தாகசாந்தி

சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக இன்று 2011 - 12 - 26 .திகதி திருக்கோவில் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் குளிர்பான தாகசாந்தி வழங்கப்பட்டது.










Read more

தம்பிலுவில் றேஞ்சர்ஸ் கல்வி பிரிவிவால் நடாத்தப்படும் இரத்த தான நிகழ்வு..

சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக இன்று 2011 - 12 - 26 .திகதி தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் றேஞ்சர்ஸ் கல்வி பிரிவிவால் நடாத்தப்படும் இரத்த தான நிகழ்வு














Read more